Wednesday, 22 October 2014

திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு !


திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்நகருக்கு பன்முகங்கள் இருக்கின்றன. திண்டுக்கல் வரலாற்றின் திசைகள் செல்லும் கோட்டை தலையணை திண்டுபோல் இருப்பதால் இந்நகருக்கு திண்டுக்கல் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் வெங்காயம், நிலக்கடலையின் மொத்தச் சந்தையாகத் இவ்வூர் திகழ்கிறது. இங்கிருந்து பிரியும் சாலைகள் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களோடு இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான மலைகளின் இளவரசியான கோடைக்கானல் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பேரணை, சிறுமலை ஆகிய இரு சிறந்த உல்லாச ஓய்விடங்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளன.

திண்டுக்கல் வரலாறு

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படை தளங்களில் ஒன்று .

மலைக்கோட்டை கோவில்

திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் இக்கோவிலை கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.

Thursday, 16 October 2014

கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா? 


அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், 


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

Wednesday, 15 October 2014

வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து டிப்ஸ்...

எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. மனை சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வாஸ்து பெரிதும் உதவி புரியும்.


வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும், எந்த பொருட்கள் வைக்க வேண்டும், எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியேலே இருக்கிறது. அப்படி தான் வீட்டில் உள்ள தலைவாசல் கதவும். வீட்டின் தலைவாசல் தான் முக்கிய ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அதனை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.



நம் வீட்டில் உள்ள தலை வாசல் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அட்வான்ஸ்ட் ஃபெங் சூயி மற்றும் வாஸ்து சாஸ்திர ஆலோசகரான டாக்டர். ஸ்னேஹல் எஸ். தேஷ்பாண்டே இதனை பற்றி விலாவரியாக கூறுகிறார். தலைவாசல் என்பது வீட்டின் வாயை போன்றதாகும். இதன் வழியாகத் தான் வீட்டிற்குள் அனைத்து சக்திகளும் உள்ளேறும். அதனால் இது எப்படி இருக்க வேண்டும் என்றும், எப்படி இருக்க கூடாது என்றும் சில விதிமுறைகள் உள்ளது.



 தென் மேற்கு திசை வீடு

தென் மேற்கு திசையில் பார்த்தமாறு இருக்கும் வாசல் கதவை கொண்ட வீட்டை தேர்ந்தெடுக்காதீர்கள். இது தீய சக்திகள் உள்ளேறும் திசையாகும். அதனால் பல போராட்டங்களை சந்தித்து, பல நல்வாய்ப்பை இழக்க நேரிடுவீர்கள். ஆனால் ஃபெங் சூயி சாஸ்திரப்படி, அந்த மாதிரியான வீட்டில் செல்வ செழிப்பு புரளும் யோகம் இருந்தால், முதல் 3-4 வருடங்களுக்கு அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த பணப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள். மேலும் வீட்டின் தலைவாசல் கதவு ஏற்கனவே தென் மேற்கு திசையை நோக்கி இருந்தால், இடது கையில் கதம் வைத்திருக்கும் இரண்டு அனுமான் படங்கள் அல்லது டைல்ஸ் கற்களை கதவின் வெளியே பதித்து, அதன் பின் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். மஞ்சள் நிற மாணிக்க கல், எர்த் கிரிஸ்டல், ஈயம் போன்ற கற்களும் இந்த பிரச்சனையை தீர்க்க உதவும். குறிப்பாக இவைகளை பயன்படுத்தும் முன் வல்லுனர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. இருப்பினும் இவ்வகை வீட்டை தவிர்ப்பதே நல்லது.


 தென் கிழக்கு திசை வீடு

தென் கிழக்கு திசையை நோக்கியுள்ள தலைவாசல் கதவு இருந்தால், உடல்நல குறைவு, கோபம், வழக்குகள் போன்றவைகள் உள்ளேறும். இவ்வகை வீடுகளில், தலைவாசல் கதவுகளின் வெளிப்பக்கமாக காயத்ரி மந்திரம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டுங்கள். உரிய ஆலோசனையோடு கோரல், மஞ்சள் மாணிக்க கல் மற்றும் செம்பு போன்ற கற்களை பயன்படுத்தி, இந்த கதவின் குறையை சற்று குறைக்கலாம்.

 
 தெற்கு பார்த்த வீடு

தெற்கை நோக்கி அமைந்துள்ள தலைவாசல் கதவுகள், கூரிய சக்தியை உள்ளே கொண்டு வரும். இது வீட்டிலுள்ள நேர்மறையான சக்தியை சீர் குலைக்கும். இவ்வகை கதவுகள் இருந்தால், பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும். சில நேரம் சண்டை மற்றும் வாக்குவாதத்திலும் இழுத்து விடும். இந்த பிரச்சனைக்கும், மேற்கூறிய படி அனுமான் படம் பதித்த படத்தையோ, டைல்ஸ் கற்களையோ கதவுகளின் வெளிப்பக்கமாக பதித்து விடுங்கள். ஈயம் மற்றும் பூனைக் கண் கிரிஸ்டல்களை பயன்படுத்தி, இதிலிருந்து சற்று பாதுகாக்கலாம். ஆனால் இந்த கதவு நான்காம் படவில் இருந்தால், குடியிருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.


 மேற்கு பார்த்த வீடு

மேற்கு திசையை நோக்கி தலைவாசல் கதவு அமைந்திருந்தால், அது சுறுசுறுப்பான திறனையும், கொண்டாட்ட திறனையும் அளிக்கும். அதனால் இளைஞர்களுக்கு இது மிகவும் நல்லதாக அமையும். அதனால் தான் ஜப்பானில் உள்ள கெய்ஷா வீடுகள் அனைத்தும் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

 வடமேற்கு திசை வீடு

வடமேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும் தலைவாசல் கதவுகளினால், பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இதனுடன் சேர்ந்து மற்ற வாஸ்து விதிமுறைகள் படி வீடு இருந்தால், ஆரோக்கியம், பொருள் வளம், செல்வம் என அனைத்தும் பெருகும். இதில் இருக்கும் ஒரே குறை, வாசல் கதவு மேற்கை நோக்கி இருந்தால், வீட்டின் முதன்மையான ஆண் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். அதே போல் வடக்கை நோக்கி இருந்தால், இது பெண்ணுக்கு பொருந்தும்.


குறிப்பு


பொதுவாக கிழக்கு , வடக்கு, வட கிழக்கு போன்ற திசைகளை நோக்கி இருக்கும் தலைவாசல்கள் தான் நல்லது. இருப்பினும் இழுவை, அளவு குறைப்பு, நிலத்தடி நீர் தொட்டி, ஃபெங் சூயி போன்றவைகளால் தான் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும், பொருள் வளமும் அடங்கியுள்ளது.